நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி […]
