கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது இ-பதிவு இல்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி இதுவரை தேவையில்லாமல் […]
