மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடல் பகுதியில் நுழைவதை தடுப்பதற்காக விடிய விடிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு கிராம மீனவர்களுக்கு இடையே சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் கடலூர் மாவட்ட கடல் பகுதிக்குள் படகுகளுடன் நுழைய […]
