கடலூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் போலீசார் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவையொட்டி போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் இருசக்கர வாகனத்தை போலீசாருடன் ஓட்டி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஊர்க்காவல் படையினர், தன்னார்வ […]
