தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மேலும் தேவையின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை மீறி இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு […]
