பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் பத்திரக்கோட்டை பகுதியில் நாகமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். சரண்யா அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட சரண்யா கடந்த இரண்டு மாதமாக விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய சரண்யாவிற்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் […]
