தனியார் கடைக்கு சென்ற நபர் தனது விலாசத்தை மாற்றி கூறிய குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காந்தி வீதியில் தவணை முறையில் பொருட்களை விற்கும் தனியார் கடை ஒன்று இருக்கிறது. இந்த கடைக்கு ஒருவர் தவணை முறையில் டி.வி. வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் தான் சிவகங்கை பேருந்து நிலைய பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் கடை ஊழியர்கள் அவரது ஆதார் எண்ணை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அந்த […]
