வாகன சோதனையின் போது வசமாக சிக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூர் ரயில்வே கேட் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் ஏர்கன்மாடல் துப்பாக்கி ஒன்று இருந்தது. பின்னர் காவல்துறையினர் அந்த துப்பாக்கியை கைப்பற்றி காரிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்ததோடு, அதிலிருந்த 5 பேரையும் காவல்நிலையத்திற்கு […]
