காவல் அதிகாரிகள் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிறுத்தி தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என கைகூப்பி வணங்கியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளுக்கு கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமானோர் […]
