100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிய 60 வயது முதியவர், போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் சுமார் 3 மணி நேரம் போக்குக் காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினந்தோறும் மது போதையில் சாலையில் உள்ள பேருந்துகளை வழி மறித்து கலாட்டா செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் […]
