அமர்நாத் குகை கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 40,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும்லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். இந்த வருடம் பாதயாத்திரை பயணத்திற்க்காக 1,60,000 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். […]
