ஓடும் பேருந்தில் இரண்டு பெண்களிடம் இருந்த ரூபாய் 6200 திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராஜலட்சுமி மற்றும் மகேஸ்வரி தென்காசி மாவட்டத்திற்கு பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மகேஸ்வரி தனது கைபை பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதுகுறித்து அவர் ராஜலட்சுமியிடம் கூறியுள்ளார். அதேபோல் அவரது கைப்பையும்பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருவரும் பேருந்து நடத்துநரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பயணிகளுடன் பஸ்ஸை திருவேங்கடம் […]
