நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தின் மீது மாணவர்கள் கல்வீசி கண்ணாடி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் பகுதியிலிருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்த சமயத்தில் வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மாணவர்கள் நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்கள் கல்லெடுத்து பேருந்தை நோக்கி எறிந்துள்ளனர். இதனால் பேருந்தின் பின்பக்க […]
