ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நந்தல் மேட்டுப்பாளையத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கிரிஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கடலூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் ஏறி கிரிஜாவின் இருக்கைக்கு அருகாமையில் அமர்ந்துள்ளனர். பின்னர் டிக்கெட் வாங்குவதற்காக தனது கையில் […]
