குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் பகுதியில் ஊத்தா வெட்டிகுளம் உள்ளது. இந்த குளம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டதாகும். தற்போது இந்த குளத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் ஆகாயத்தாமரை குளம் முழுவதும் பரவி புதர் போல் காட்சி அளிக்கிறது. இவ்வாறு புதர்கள் மண்டி கிடப்பதால் குளத்தில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் […]
