கூலூர் பகுதியில் அமைந்திருக்கும் பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட கூலூர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் தொட்டியானது கட்டப்பட்டது.. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதமடைந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. தற்போது அந்த பழைய நீர்த்தேக்கத் தொட்டிக்கு பதில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பழைய குடிநீர்த் […]
