கோவை அருகே 2 நாட்களில் 2 பேரை யானை மிதித்து கொன்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டுயானை அவர்களை விரட்டியது. இதில் பிரேம் கார்த்தி என்பவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியுள்ளனர். இதேபோல நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி […]
