இளம் பெண்ணை வீட்டில் பூட்டி சிறை வைத்த தி.மு.க பிரமுகரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பழமலைநாதர் நகர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.புதூர் கிராமத்தில் இருக்கும் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நாற்பத்தி மூன்று லட்சத்திற்கு தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பிரமுகர் […]
