நாட்டின் கருத்தாக்கத்தின் மேல் குடியுரிமை திருத்தச் சட்டம் தாக்குதல் நடத்துவதாகவும் எனவே உச்ச நீதிமன்றம் அதனை நீக்கும் எனவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அஸ்ஸாமில் நடைபெறும் வன்முறைக்குக் காரணமே குடியுரிமை திருத்தச் சட்டம்தான். இந்தியாவின் அடிப்படை கொள்கைகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டில் பிறக்கும் 40 விழுக்காட்டினர் குறித்து பதிவு செய்யப்படுவதில்லை. சட்டத்தில் சில […]
