புற்றுநோய் மருத்துவமனைகள் நம் நாட்டில் குறைவாக உள்ளதாகவும், அதனை அதிகப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரைப்பட நடிகை கௌதமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், திரைப்பட நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ நிபுணர்கள் நம் நாட்டில் மிகக் குறைவாக இருக்கின்றனர். அதனை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும். […]
