வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]
