கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரகுபதி(25) என்ற மகன் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏஜென்ட் மூலம் குவைத் நாட்டிற்கு ரகுபதி ஓட்டுநர் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டிரைவர் வேலை கொடுக்காமல் வீட்டு வேலை செய்ய வலியுறுத்தி சிலர் ரகுபதியை அடித்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தன்னை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என செல்போன் மூலம் ரகுபதி […]
