பெற்றோரை இழந்த துக்கத்தில் சிறுமி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் நடுசுரங்குடி பகுதியில் வசித்துவந்த பாக்யராஜ்-செல்வி தம்பதியினரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்கள் அந்த பட்டாசு ஆலையில் நீண்ட நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காலையில் வழக்கம் போல பணிக்கு சென்று தனித்தனி அறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். […]
