ஓரினச்சேர்க்கைக்கு மறுப்புத் தெரிவித்த சிறுவனை கல்லால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மேம்பாலத்திற்குக் கீழ் தலையில் பலத்த காயங்களுடன் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவன் அதே பகுதியில் வசிக்கும் 4-ம் […]
