பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் இரவு 10:34 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது என தேசிய நிலநடுக்க மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கமானது […]
