அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் தபால்களின் மூலமாக வாக்களிக்க விண்ணப்பங்களை தேர்தலுக்கு முன்பாக தரப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் தபால் வாக்கு படிவங்களை ஏற்க வலியுறுத்த 50-க்கும் அதிகமானவர்கள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
