நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த தம்பதியினருக்கு அதீத துணிவுக்கான விருதை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை […]
