ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 108 ஆம்புலன்ஸ் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் படி ஆக்சிஜன் வசதியோடு அந்த பெண்ணை ஆம்புலன்சில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை இல்லாததால் அந்தப் பெண் சுமார் […]
