இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்தை தாண்டியுள்ளது நாட்டு மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மத்திய சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடும் போதெல்லாம் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். […]
