தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போது குடிபோதையில் இருந்த சங்கர் வீட்டில் மோட்டார் சைக்கிளில் ஊற்றுவதற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மனைவியின் மீதும் தன் மீதும் ஊற்றிவிட்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். அதன்பின் வலி தாங்க முடியாத காரணத்தினால் கத்திக்கொண்டே வெளியில் […]
