பிச்சை எடுத்து வாழ்ந்துவந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் இறந்த நிலையில், அவரது உடலை தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்த தலைமைக் காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் ஆதரவற்ற முதியவர் (சுமார் 70 வயது) ஒருவர் பிச்சை எடுத்துவந்தார். இவர் நேற்று திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலர், அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் தலைமைக் காவலர் லிங்கேஸ், தனது […]
