துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவின் தோட்டத்தில் வேலை செய்த டிராக்டர் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட போடந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (50). இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவிற்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த 5வருடங்களாக டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு சென்ற முனியாண்டி இறந்து […]
