திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 5ம் கட்டமாக ஊரடங்கு 78வது நாளாக அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தற்போது வரை பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் உள்ளன. […]
