தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பணத்தினை இழந்து தற்கொலை செய்துக் கொள்வது தொடர்கதையாகி விட்டது. இதன் காரணமாக இந்த விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மியின் தாக்கம் பற்றி ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி […]
