நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் தொழில்நுட்ப பணியால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து அடி பம்பில் தண்ணீர் கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி […]
