தாய்லாந்தில் காட்டுத்தீயில் சிக்கிய நிலையில் நாய்க்குட்டியை தீயணைப்பு படையினர் உயிரை பணையம் வைத்து பத்திரமாக மீட்டனர். உலகில் பெரும்பாலான காடுகளில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தீ விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிம்மா என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்ட மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கிடையே நாய்க்குட்டிகள் முனங்கும் சப்தம் கேட்டது. சத்தம் கேட்டதையடுத்து உடனே பாதுகாப்பு […]
