சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் வசிக்கும் பூசாரி சிங்கராஜா என்பவர் பழங்கால சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்த தகவலின் படி பாண்டியநாடு பண்பாடு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, மகாபாரதம், அக்னி, மச்ச புராணங்களில் அடிப்படையில் தேவர்களின் குரு பிரகஸ்பதி ஆவார். இவர் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி […]
