சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருங்குறுக்கை கிராமத்தில் நடராஜன்(73) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 2018- ஆம் ஆண்டு கடைக்கு சாக்லேட் வாங்குவதற்காக 6 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நிறைய சாக்லெட்டுகள் தருகிறேன் எனக்கூறி நடராஜன் சிறுமியை கடைக்கு பின்புறம் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
