உணவுகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க கடைகளில் குவிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ஹோட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகளை தயார்படுத்தி வருகின்றனர். சிலர் தரமற்ற இறைச்சியை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அஞ்சலி ரவுண்டானா அருகே இருக்கும் ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் […]
