ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பகுதியில் இருக்கும் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மார்க்சகாய ஈஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 23 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் உள்ளது. இந்த இடமானது இந்து சமய அறநிலையத்துறையின் பாற்பட்டது. இந்நிலையில் கோவிலுக்குச் சொந்தமான அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி அதில் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். ஆனால் […]
