நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து வர்த்தகக் கட்டடம் கட்டுவதைத் தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆனால், தற்போது அப்பணிகளில் அலுவலர்கள் ஈடுபடவில்லை என விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையில், தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நீர்நிலைப் […]
