நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2012-ஆம் ஆண்டு நிர்பயா என்ற மாணவி ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.இந்த வழக்கில் இறுதியாக நான்கு குற்றவாளிகளுக்கு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், டெல்லி நீதிமன்றம் அதற்கு திடீரென தடைவிதித்த நிலையில், அந்தத் தடையை எதிர்த்து மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]
