Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அதுல எல்லா பணமும் போச்சு” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… நீலகிரியில் பரபரப்பு…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடஹல்லா கிராமத்தில் செந்தமிழ் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சசிகுமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மொத்தமாக சப்ளை செஞ்சிருக்காங்க… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

40 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்களை ஒருவர் காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற 40 கிலோ போதைப் பொருட்களை காரில் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு கார் டிரைவரிடம் காவல்துறையினர் நடத்திய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா கட்டணும்….? அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பொதுமக்கள் ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் நடைபாதையை மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவெனு ஹட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். அதன்படி அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உடனே சரி பண்ணிட்டாங்க… இடையூறாக இருந்த ராட்சத மரம்… பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பலத்த மழையின் காரணமாக சாய்ந்து விழுந்த ராட்சத மரத்தை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்ததால் ஊட்டியில் இருக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர். அதன் பிறகு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்க தானே இருந்தான்… காலையில் கண்ட காட்சி… பார்த்ததும் பதறிய குடும்பத்தினர்…!!

பலாமரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செண்ப கொல்லி ஆதிவாசி காலனியில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்த சதீஷ் அதிகாலை நேரத்தில் திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அனைத்து இடங்களிலும் சதீஷை தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் சதீஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அதை கவனிக்கலையே…. தொழிலாளியை துரத்திய யானை… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

காட்டு யானை ஒன்று தொழிலாளியை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு காலை 6 மணி அளவில் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. இந்த யானையை பார்த்ததும் பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை வருவதை பார்க்காமல் நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளியை அங்கிருந்த பொதுமக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாதுவாக மாறிவிட்டது… 3 பேரை கொன்ற காட்டு யானை… வனத்துறையினரின் சிறப்பான முயற்சி…!!

மூன்று பேரை கொன்ற ஒற்றை காட்டு யானையை 5 மாதங்களுக்குப் பிறகு கூண்டில் இருந்து விடுவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் சுற்றி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தந்தை மகன் உட்பட 3 பேரை தாக்கி கொன்ற இந்த ஒற்றை காட்டு யானையை கடந்த பிப்ரவரி மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் பிறகு இந்த காட்டு யானையானது முகாமில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது கடந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இது மிகவும் அரிதானது… மண் வளத்தை மேம்படுத்தும்… புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிரி…!!

முதன் முறையாக அரிய வகை மண் நுண்ணுயிரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகம் அமைந்துள்ளது. இந்நிலையில் மிகவும் அரிதான புதிய நுண்ணுயிரியை ஆராய்ச்சியாளர்கள் மண்ணிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறும் போது ஒரு மீட்டர் நீளம் உடைய இந்த மண் பூச்சி இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் கிடையாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சி இனத்திற்கு பயோனிச்சியூரஸ் தமிழன்சிஸ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அந்த நேரத்தில் வெளிய போகாதீங்க… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… வனத்துறையினரின் அறிவுரை…!!

ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கல்லிங்கரை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை பொது மக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பலமாக வீசிய சூறைக்காற்றினால்… முறிந்து விழுந்த ராட்சத மரம்… சிரமப்படும் பொதுமக்கள்….!!

பலமாக வீசிய சூறைக்காற்றால் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் பெண்ணின் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பல்வேறு பகுதிகளில் உள்ள மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுவதால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பலமாக வீசிய சூறைக்காற்றால் காளியோடு ஆதிவாசி காலனியில் வசிக்கும் ஸ்ரீஜா என்பவரது வீட்டின் மீது மரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்கு ரொம்ப கோவம் வருது… அட்டகாசம் செய்து சிக்கிய கரடி… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டில் அடைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரடிகளின் அட்டகாசம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் கரடிகள் அங்குள்ள பேக்கரி, கோவில் போன்ற இடங்களில் இருக்கும் கதவுகளை உடைத்து பொருட்களை நாசப்படுத்துவதால் அட்டகாசம் செய்யும் கரடிகளை விரைந்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் மாட்டிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு போனது தப்பா…? அக்காள் கணவரின் செயல்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது அக்காள் கணவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் ஒரு வாலிபர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு வந்த தனது மனைவியின் தங்கையை இந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாட்டியுடன் சென்ற போது… உயிருக்கு போராடிய 5 வயது பெண் குழந்தை… நீலகிரியில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 5 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சியா என்ற 5 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் குமாரின் தாயாரான ஓமனா என்பவர் தனது பேத்தி லட்சியாவுடன் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து ஐந்து வயதான லட்சியா மீது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆகுமோ தெரியல…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… வனத்துறையினரின் முயற்சி…!!

இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இந்தப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்கு அப்புறம் தான் தெரியும்… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை… வனத்துறையினரின் தகவல்…!!

தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அழுகிய நிலையில் கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடசோலை என்ற கிராமத்தில் இருக்கும் தனியார் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடப்பது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படித்தான் வெளிய வரணுமா…? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

முகக்கவசம் அணியாத 20 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள துணி மற்றும் நகைக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் தொற்று பரவும் வண்ணம் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்துள்ளனர். அதன் பின் அதிகாரிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாருக்கும் போட்டாச்சு… சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறையினர்… சாதனை படைத்த நீலகிரி…!!

அனைத்து பழங்குடியின மக்களுக்கும் நீலகிரி மாவட்டத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் காட்டுநாயக்கர், தோடர் உள்பட 6 வகையான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள பயந்து வனப்பகுதிக்குள் ஓடி விடுகின்றனர். இதனால் சுகாதாரதுறையினர் இந்த மக்களை நேரில் சென்று பார்த்து தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மருத்துவ குழுவினர் வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் வீடு திரும்பும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு மட்டுமே அனுமதி… பூங்காவில் புது கட்டுப்பாடுகள்… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

கட்டணத்தைச் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு 30 பேர் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அரசு பூங்காக்களை காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சிக்காக திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கட்டணமில்லாமல் நடைபயிற்சி செய்து வந்தவர்கள் தற்போது ஒரு மாதத்திற்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 100 பேர் மட்டுமே அரசு பூங்காக்களில் நடைபயிற்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா நாங்க விரட்டிருவோம்… அட்டகாசம் தாங்க முடியல… நீலகிரியில் பரபரப்பு…!!

அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரி பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொன்று வீசிட்டு போயிருக்கு… சாலையில் கிடந்த உடல்… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் எல்க்ஹில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துவிட்டது. இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் சாலமோன் என்பவரது வீட்டு வளாகத்தில் கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்றுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த அந்த நாயை சிறுத்தை குன்னூர்-கோத்தகிரி சாலையில் இருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொழிலாளர்களின் நலன் கருதி… இரவு வரை வெயிட் பண்றாங்க… சுகாதாரத்துறையினரின் சிறப்பான பணி…!!

கூலி வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் இரவு வரை  காத்திருந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் குறும்பர், காட்டு நாயக்கர் இன ஆதிவாசி மக்கள் அப்பகுதியில் இருக்கும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இந்த கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் வருவதில்லை. இதனால் இந்த மக்களிடம் நேரடியாக சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட்டு கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்குன்னு இப்படியா பண்ணனும்… பாகன் மீது நடவடிக்கை… அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

யானையை தாக்கிய குற்றத்திற்காக பாகனை பணி இடைநீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகன் முருகன் என்பவர் சேரன் யானையை  குளிப்பதற்காக மாயார் ஆற்றிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பாகனின் கட்டளைக்கு அடிபணியாததால் கோபமடைந்த முருகன் யானையை தாக்கியுள்ளார். இதனால் யானையின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… நீலகிரியில் நடந்த சோகம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ருக்மணி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூங்காவில் வாக்கிங் போகணுமா…? அப்போ இதை கொடுங்க… விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்…!!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்பட்டு அனுமதி சீட்டு கொடுக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்கா போன்றவற்றில் பொதுமக்கள் இன்று முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டு நடைபயிற்சி செய்பவர்களுக்காக புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது நடைபயிற்சி செல்வதற்காக இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதை எடுக்க முயற்சிக்கும் போது… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து தேவர் சாலை செல்லும் ரோட்டில் மாலை 5 மணி அளவில் ஒரு கார் சென்றுள்ளது. இந்த காரை கூடலூர் பகுதியில் வசிக்கும் அணில் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த கார் புஷ்பகிரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன் பின் அந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அது பின்னாடி வருது… அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

யானைகள் பொதுமக்களை துரத்தியதோடு, குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாக்கு, வாழை, தென்னை போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென வனப்பகுதியில் இருந்து இரவு 7 மணி அளவில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை துரத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானைகள் பஞ்சைகொள்ளி பகுதிக்குள் நுழைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண கூடாது…. பாகனின் மூர்க்கத்தனமாக செயல்… அதிகாரிகளின் நடவடிக்கை…!!

பாகன் தாக்கியதால் வளர்ப்பு யானையின் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வில்சன், ஜம்பு, சேரன் உள்பட கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாகன் முருகன் என்பவர் தாக்கியதால் 35 வயதான சேரன் என்ற வளர்ப்பு யானையின் இடது கண்ணில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த யானைக்கு முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படிதான் நடந்திருக்கும்… இறந்து கிடந்த சிறுத்தை… வனத்துறையினரின் தகவல்…!!

தேயிலை தோட்ட பகுதியில் பெண் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் டெரேமியா என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்குள் வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை அடுத்து இந்த தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணிற்கு நடந்த கொடுமை… நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள்ள காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக முஸ்தபா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் காந்தல் புதுநகர் பகுதியில் வசிக்கும் மாகி என்ற பெண்ணிற்கும் முஸ்தபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. மேலும் இந்த பெண்ணிற்கு திருமணமாகி கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கதான் சுத்திட்டே இருக்கு… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

சிறுத்தை குடியிருப்பு பகுதிகளுக்குள் நடனமாடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சி அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாருக்கும் தெரியாமல்… வாலிபர் செய்த செயல்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சாராய ஊறல் போட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சேத்துபேட்டை கிராமத்தில் கோத்தகிரி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு உள்ள ஒரு வீட்டின் பின்புறம் போடப்பட்டிருந்த 15 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல… நீங்களே இழப்பீடு கொடுங்க… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானை பள்ளிவாசல் சுற்று சுவரை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று நள்ளிரவு நேரத்தில் தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியதோடு, அங்குள்ள மரத்தில் விளைந்த மாங்காய்களை பறித்து தின்று அட்டகாசம் செய்துள்ளது. இதனை அடுத்து நீண்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்… பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

சமையல் செய்து கொண்டிருக்கும் போது தீ பற்றியதால் உடல் கருகி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லலிதாகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்தினி என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லலிதா குமாரி தனது மகளுடன் ராஜாவை விட்டு பிரிந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து தான் வந்துருக்கு… மயங்கி விழுந்த பெண் தொழிலாளி… நீலகிரியில் நடந்த சோகம்…!!

பாம்பு கடித்து பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்குச்சி கனாக்கம்பை கிராமத்தில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சரோஜா தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது புதர் மறைவிலிருந்து வந்த பாம்பு சரோஜாவை கடித்து விட்டது. இதனையடுத்து சரோஜா திடீரென மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படி போடவே கூடாது… நாங்க ஏற்கனவே சொல்லிருக்கோம்… நோய் பரவும் அபாயம்…!!

சாலையில் கொட்டப்படும் மருத்துவ உபகரணங்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாக்கமூலா என்ற இடத்தில் இருக்கும் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை கொட்டியவர் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை. இது குறித்து அறிந்த சுகாதார பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று சாலையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் கூறும் போது, பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்ட கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் நடந்த அட்டூழியம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கோயிலுக்குள் கரடி புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காமராஜர் நகர் பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலுக்குள் அதிகாலை 4 மணி அளவில் புகுந்த கரடி கோவில் கதவை உடைத்து சேதப்படுத்தியதியதோடு, பூஜைக்கு வைத்திருந்த பொருட்களை தூக்கி வீசியுள்ளது. இதனையடுத்து அந்த கரடி விளக்கில் இருந்த எண்ணெயை குடித்து விட்டு அங்கிருந்து சென்றது. இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாமே வெளிய தான் நிக்குது… அலறி சத்தம் போட்ட குடும்பத்தினர்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

தொழிலாளியின் வீட்டை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கத்தரிதோடு கிராமத்திற்குள் புகுந்த 6 காட்டு யானைகள் பொது மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனை அடுத்து காட்டுயானைகள் கூலித் தொழிலாளியான முருகதாஸ் என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் வீட்டிற்குள் இருந்த முருகதாஸ் குடும்பத்தினர் பயத்தில் அலறி சத்தம் போட்டுள்ளனர். அதன் பிறகு காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எந்த நேரத்தில வரும்னு தெரியல… அலறியடுத்து ஓடிய பொதுமக்கள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

இரண்டு காட்டு யானைகள் சாலையில் சுற்றி திரிந்ததை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் காலை 6 மணி அளவில் இரண்டு காட்டு யானைகள் நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் சாலையில் நின்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எப்போ விழும்னு தெரியல… அச்சத்தில் கடக்கும் வாகன ஓட்டிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

போக்குவரத்திற்கு இடையூறாக முறிந்து தொங்கும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கூடலூரில் இருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருக்கும் மூங்கில் மரங்கள் பலத்த மழை மற்றும் காற்றினால் முறிந்து தொங்குகிறது. இதனை அடுத்து மூங்கில் மரங்கள் முறிந்து தொங்குவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் இவ்ளோ வேகமா… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது பாட்டில்களை கடத்தி சென்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது, அதில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லாரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கனமழை காரணமாக… சாலையில் விழுந்த விரிசல்… பொதுமக்களின் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முதுகுலா, தங்காடு, காத்தாடிமட்டம் போன்ற பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் மணியட்டி கிராமத்தில் இருந்து செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அங்கு பெய்த கனமழை காரணமாக மணியட்டி-தங்காடு சாலையோரத்தில் விரிசல் ஏற்பட்டதால் சாலை முழுவதும் துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே விரிசல் பெரிதாகி விடாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒரு வழியா பிடிச்சிட்டாங்க… களமிறங்கிய கும்கி யானைகள்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை பிடித்து கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினர் அதனை மர கூண்டுக்குள் அடைத்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்துள்ளது. இதனை அடுத்து அந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததால் காயமடைந்த யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் உதயன், விஜய், சுமங்களா உட்பட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதர்மறைவில் நின்ற விலங்கு… மாற்றுதிறனாளிக்கு நடந்த கொடூரம்… வனத்துறையினரின் நிவாரண தொகை…!!

காட்டு யானை தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி பகுதியில் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பாலகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென பாலகிருஷ்ணனை தாக்கி தூக்கி வீசிவிட்டது. அதன் பின் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தம் எழுப்பி அந்த காட்டு யானையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்கயும் வருவாய் இல்ல… மொத்தம் 7 கோடி ரூபாய் இழப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு இதுவரை 7 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் தொட்டபெட்டா மலைச் சிகரம், படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்றவை செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்று வருவர். அப்போது சுற்றுலா பயணிகளுக்கு அங்குள்ள ஹோட்டல் அறைகளில் ஒரு நாளைக்கு தங்குவதற்கான வாடகை 1500 முதல் 3,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்னது வேலைக்கு போறீங்களா…? அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… நீலகிரியில் பரபரப்பு…!!

கேரட் அறுவடைக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியில் இருக்கும் வி. சி காலனி கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காலனியில் வசிக்கும் தொழிலாளர்களை கேரட் அறுவடைக்காக அழைத்து செல்ல லாரி ஒன்று சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்லக்கூடாது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அது உடம்புல அப்படி இருந்துச்சு… அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… வனத்துறையினரிடம் கோரிக்கை…!!

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த காட்டெருமை விவசாய பயிர்களை மிதித்து அட்டகாசம் செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி பேபி நகருக்குள் புகுந்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அடித்து பிடித்து ஓடினர். இதனையடுத்து அந்த காட்டெருமை நீண்ட நேரமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து விவசாய பயிர்களை மிதித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அழுகிய முட்டை கொடுக்காங்களா…? அதிர்ச்சியடைந்த மாணவர்கள்… அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

சத்துணவு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு அரசு தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவு மையம் மூலம் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் முட்டை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்களுக்கு வழங்கிய சில மூட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

122 ஆண்டுகள் முடிஞ்சிருச்சு… அனைவரையும் கவர்ந்த பயணம்… உலக பாரம்பரிய சின்னம்…!!

யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மலை ரயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து ஊட்டிக்கு 46.61 கிலோ மீட்டர் தூரம் மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு மிகவும் ஆசைப்படுவர். ஏனெனில் இந்த பயணத்தின்போது சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளின் அழகை கண்டு ரசிக்க முடியும். இந்நிலையில் இந்த மலை ரயிலானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணிட்டு இது வேறையா…? உரிமையாளரின் வாக்குவாதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி திறந்து வைத்திருந்த ஜெராக்ஸ் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மருத்துவமனை சாலை கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஒரு ஜெராக்ஸ் கடை திறந்திருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து கடையை மூடுமாறு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதனால கொஞ்சம் லேட் ஆகுது… அங்க வந்தா பிடிச்சிருவோம்… வனத்துறையினரின் புது முயற்சி…!!

காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த காட்டு யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது காயத்தின் வலியால் அவதிப்பட்டு வரும் இந்த காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கூடலூரில் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த காட்டு […]

Categories

Tech |