கோத்தகிரி வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சண்முகம் இவர் கோத்தகிரி அருகில் உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் ஆறு வயது. இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். சக்திவேல் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் விளையாடசென்றுள்ளான் . ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. […]
