சிகிச்சை அளிக்கப்பட்ட யானை ரேடியோ காலர் பொருத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிந்தது. இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த யானையை கடந்த மே மாதம் வனத்துறையினர் பிடித்து கூண்டில் அடைத்து விட்டனர். அதன்பின் ரிவால்டோ யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் அதற்கு பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வனத்துறையினர் சீராக பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
