பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியிருக்கிறது. […]
