திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலி கம்பங்களை அகற்றிட கோரி மாநகராட்சி அலுவலக மையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மாநகர ஆணையரிடம் தெரிவிக்க மனுக்களை கொண்டு வந்திருந்தனர். அந்த வகையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் பேருந்து நிலையத்தில் உள்ள வேலியை அகற்ற கோரிய மனு ஒன்றை அளித்தனர். அதில் […]
