வேளாண் பொறியியல் துறை சார்பில் மரங்களிலிருந்து தேங்காய் பறிப்பதற்காக நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் 2 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் இருக்கின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இளநீர் மற்றும் தேங்காய் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் 60 அடி உயரம் வரை இருக்கும் தென்னை மரங்களில் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தேங்காய் பறிப்பதற்காக நவீன இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் […]
