தொடர்ந்து பெய்த கன மழையில் நனைந்த நெல்கள் முளைப்பதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அரியராவி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக நேரடி கொள்முதல் நிலையம் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அனைத்து பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரசு சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விவசாயிகளிடம் […]
