பெண் ஊழியர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் நகராட்சியில் 120 பெண் ஊழியர்கள் கொரோனாத் தொற்று காலத்தில் சுகாதாரத் துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பொதுமக்களின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் மற்றும் சளி இருக்கிறதா என்று பரிசோதித்துள்ளனர். மேலும் இந்த பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு […]
